தமிழகத்தில் உள்ள மெடிக்கல்களில், மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகளை தரக்கூடாது என மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.
வெளியான உத்தரவு:
தமிழகத்தில் அமைந்துள்ள மருந்து கடைகளில், பெரும்பாலான பொதுமக்கள் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை பெற்று வந்தனர். ஒரு சில நேரங்களில், மெடிக்கல் கடைக்காரர்கள் தவறான மாத்திரைகளை விநியோகம் செய்வதால் சம்பந்தப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலை கூட ஏற்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வந்த நிலையில், இதை தடுக்க மருந்து கட்டுப்பாட்டு துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
திருவான்மியூரில் உள்ள ஒரு மெடிக்கலில் ரசீது இல்லாமல் வலி நிவாரணி மருந்து விற்பனை செய்த விவரம் தெரிய வந்ததால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், மருந்து கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது. இது போன்ற விஷயங்களில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.