குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்குதல் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் படி, சுமார் 1 கோடிக்கு மேற்பட்டோருக்கு மாதந்தோறும் ரூ. 1000 அவர்களது வங்கி கணக்கிற்கு டெபாசிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த சுமார் 57 லட்சம் பேரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து, தமிழக அரசு உரிமை தொகையை பெறாதவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிய https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பரிசோதிக்கும்படி அறிவுறுத்தியது. இதையறிந்த, பலர் ஒரே நேரத்தில் இ-சேவை மையங்களில் குவிந்துள்ளனர். இதனால், https://kmut.tn.gov.in/ இந்த தளம் சில நேரத்திற்கு முடங்கி பின் மாலை நேரங்களில் ஓரளவுக்கு சரியானது. இதன் பின், தங்களது விண்ணப்ப நிலையை ஆராய்ந்தவர்களுக்கு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான sms வரும். இந்த sms ல் உள்ள காரணங்கள் தவறாக இருந்தால் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களே., இந்த மாதம் மட்டும் பெரிய அளவில் ஊதியம்? அடித்தது ஜாக்பாட்!!!