
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் கடந்த 2 மாதங்களாக பயன் அடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு மாதந்தோறும் 15 ஆம் தேதி அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி முன்கூட்டியே இன்று (நவம்பர் 9) முதல் ரூ. 1000 வரவு செய்யப்பட்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதற்கிடையில், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் சுமார் 11 லட்சம் மகளிர் மேல்முறையீடு செய்துள்ளனர். இவ்வாறு மேல்முறையீடு செய்தவர்களில் சுமார் 7 லட்சம் மகளிர் புதிதாக இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை.., மேல்முறையீடு செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு!!!!