
தமிழகத்தில் மகளிருக்கு உரிமை தொகையாக ரூ. 1000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் படி, 1 கோடிக்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமை தொகையை வழங்க திட்டமிடப்பட்ட நிலையில், 57 லட்ச விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காகவே https://kmut.tn.gov.in/ என்ற இணையத்தளத்தை தமிழக அரசு வெளியிட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த இணையத்தளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து மேல்முறையீடு செய்து கொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. இதற்காக, சிறப்பு முகாம்களும் நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த சிறப்பு முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் இந்த உரிமையில் கை வைத்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உரிமை தொகை ரூ.1000 நிராகரிப்பு…, இதான் காரணம்?? இதைத் தான் செய்ய வேண்டும்??