தமிழகத்தில் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு வைரஸ் பாதிப்புகளுக்கு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பெரும்பாலானோர்க்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் “மெட்ராஸ் ஐ” பரவல் வீரியம் எடுக்க தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன் மூலம் ஒருவர் பாதிக்கப்பட்டாலே, அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவ தொடங்கி விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசால் பரிந்துரைக்கப்பட்ட சொட்டு மருந்தையே பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.