ஊரடங்கில் தளர்வுகள்: தமிழகத்தில் கடைகள் திறக்கப்படுமா ??? சற்று முன் கிடைத்த செய்தி !!!

0

தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளிப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில்  சில மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகள் திறக்கப்படலாம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்கவும் வாய்ப்பு உள்ளது என செய்திகள் கசிந்துள்ளன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா என்னும் நோய் தொற்று 2019ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கி இப்பொழுது முதல் மற்றும் இரண்டாம் அலையை கடந்துபோய்க்கொண்டு இருக்கிறது . தற்போது இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் வண்ணம் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழக அரசு வருகிற 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை பிறப்பித்து செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் சற்றே குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில்  என்ன என்ன தளர்வுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.

தமிழக அரசு மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில்  சில தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கூறிவரும் நிலையில், கொரோனா பரவல் குறைவாக இருக்கும் பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் பரவல் அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தவும் தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here