தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் போது டாஸ்மாக், டீக்கடைகள் திறப்பு குறித்த செய்திகள் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தளர்வுகள் வழங்கலாமா என்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெற்றது.
ஏற்கனவே முதலமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் தற்போது கொரோனா குறைந்த மாவட்டங்களில் டீக்கடைகள்,துணிக்கடைகள், டாஸ்மாக் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் பெரியளவில் தளர்வுகளை அறிவிக்க கூடாது என்றும் பிற மாவட்டங்களில் குறிப்பாக பாதிப்பு குறைந்து வரும் பிற மாவட்டங்களில் டீக்கடைகள், துணிக்கடைகள், டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்