தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்? சுகாதார செயலாளர் விளக்கம்!!

0

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் உள்ள ஐஐடியில் தொடர்ந்து வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் பதிவாகி வருகிறது.

அதிரடி விளக்கம்:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்து வந்த கொரோனா பரவல் ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று சுகாதாரத் துறை அறிவித்தது. இதனை, மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. சென்னை ஐஐடியில், ஏற்கனவே 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, புதிதாக மேலும் பல நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா 4ம் அலை - மீண்டும் அமலாகும் பொது முடக்கம்? அரசு புதிய அறிவிப்பு!!

தொடர்ந்து, இங்கு பரிசோதனை எண்ணிக்கையும் அதிக படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும், இதுவரை 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் விரைந்து செலுத்தி கொள்ளுமாறும் அறிவித்துள்ளளார். மேலும், முழு ஊரடங்கிற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here