தமிழகத்தில் கொரோனா பரவல், அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவிப்பது குறித்த அறிவிப்புகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
அதிகரிக்கிறதா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, 9 மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், அணிய தவறியவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், தற்போதைக்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், நிலைமையை கருத்தில் கொண்டு, இது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்