தமிழகத்தில் போக்குவரத்து, திரையரங்கு, ஹோட்டல்களுக்கு இனி 50% தான் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்??முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!
தமிழகம் முழுவதும் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்??முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எதற்கெல்லாம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் கட்டுப்பாடுகள்:

  • பொதுப் போக்குவரத்து மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • பொது போக்குவரத்து மற்றும் பேருந்து, ஹோட்டல்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.

  • கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் காம்ப்ளக்ஸ்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
  • பணிக்கு செல்லும் ஊழியர்கள் அந்த நிறுவனம் கொடுத்த அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் 100 நபர்களுக்கும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களும் மட்டுமே அனுமதி
  • ஜிம்கள், சலூன்கள், பியூட்டி பார்லர்கள் போன்றவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கலாசார நிகழ்வுகள், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் புத்தக கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைப்பு.
  • துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி
  • அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர் 9.1 .2022 க்குள், தடுப்பு ஊசி செலுத்தி, அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  • கடைகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் பொது இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
  • மழலையர் பள்ளி, 1 முதல் 9 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முழு விடுமுறை அளிக்கப்படுகிறது.
  • 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி தவிர மற்ற அனைத்து கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 20 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
  • நோய்க் கட்டுப்பாடு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் நடத்தப்படும்.
  • பொதுமக்கள் அவசிய காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here