தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வார நீட்டிக்க மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழ்நாட்டில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து, இரண்டாம் கட்ட முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு மேற்கொண்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே உள்ளதால் ஊரடங்கு நீடிக்கப்படுமா?? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். அதில் ஊரடங்கை மேலும் ஒரு வார நீட்டிக்க மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!