தமிழகத்தின், ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
சுகாதாரத்துறை கடிதம் :
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா பரவல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் ஓரளவு குறைந்துள்ள நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் மீண்டும் பலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தற்போது திடீரென செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு இந்த வைரஸ் பரவல் அதிகம் ஏற்படுவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால், மற்ற மாவட்டங்களிலும் வைரஸ் பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் மாநிலத்தில் மீண்டும் பொதுமக்கள் அமலாகுமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்