தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பா??? – முதல்வர் நாளை ஆலோசனை!!!

0

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்த ஆலோசனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நடத்த உள்ளார்.

மாநிலத்தில் கொரோனா பரவலை குறைக்க கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் தொற்று பரவல் குறையவில்லை. இதனால் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனவே படிப்படியாக தமிழகத்தில் கொரோனா அதன் வீரியத்தை குறைக்க தொடங்கியது.

தொற்று பரவல் குறைந்ததை அடுத்து தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21 ஆம் தேதி வரை தற்போது அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்த சூழலில், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக முதல்வர் நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ வல்லுனர்கள், சுகாதாரத்துறை, அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கொரோனா குறைந்த மாவட்டங்களில் நகர்ப்புற பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here