தமிழகத்தில் தற்போது இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 19 ஆம் தேதியுடன் முடிய உள்ளது. எனவே ஊரடங்கு நீடிப்பது அல்லது புதிய தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் இன்று (ஜூலை, 16 2021) ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ் நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்றால் கடந்த மே 10 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்றின் பரவல் வேகம் குறைந்ததால் ஒவ்வொரு வாரமும் முதல்வர் மு.க. மருத்துவ நிபுணர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி பின் தேவையான தளர்வுகளை அறிவித்து வருகிறார். தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 19 ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
தற்போது வரை தமிழகத்தில் திரையரங்குகள், மதுபான பார்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், உயிரியல் பூங்காக்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு நடைபெற போகும் ஆலோசனை கூட்டத்தில் ஏற்கனவே கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பது, பள்ளிகளை திறக்கும் சூழல் குறித்தும்,திரையரங்குகள், மதுக்கூடங்களை திறப்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்