தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? மக்கள் நல்வாழ்வுத் துறை அதிரடி!!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? மக்கள் நல்வாழ்வுத் துறை அதிரடி!!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? மக்கள் நல்வாழ்வுத் துறை அதிரடி!!

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, வைரஸ் பரவல் பல மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அமலாகும் கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ் பரவல் சமீப தினங்களாக, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத் துறை அறிவித்தது. இதுபோக இதுவரை தடுப்பூசி செலுத்தாத மக்கள், விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில், சமீபத்தில் 26 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்தது.

பள்ளி கல்லூரிகளுக்கு காவல்துறை அறிவித்த தடை உத்தரவு - மாநிலத்தில் தொடரும் பதற்றம்!!

தற்போது, மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகுமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here