ரேஷன் கடை பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அரசின் அறிவிப்பால் குஷியில் ஊழியர்கள்!!

0
ரேஷன் கடை பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் - அரசின் அறிவிப்பால் குஷியில் ஊழியர்கள்!!

தமிழக ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, முக்கியமான அறிவிப்பை கொடுத்து, மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு அறிவிப்பு:

தமிழகத்தில் பணி புரியும் பெண் அரசு ஊழியர்களுக்கு கர்ப்ப கால விடுமுறையாக 12 மாதம் கொடுக்கப்படுகிறது. இந்த மகப்பேறு விடுமுறையில் குழந்தைகளை பராமரித்தல், தங்களின் உடல் நலத்தை பேணுதல் உள்ளிட்ட செயல்களுக்கு போதுமானதாக இருப்பதாக தாய்மார்கள் தெரிவித்து வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு 6 மாதம் மட்டுமே, மகப்பேறு விடுமுறை தருவதாக புகார் எழுந்தது. கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் ரேஷன் கடைகளில் இது போன்ற புகார்கள் அதிகம் எழுந்து வந்தது.

இதையடுத்து, மற்ற அரசு ஊழியர்களைப் போலவே ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கும் 270 நாட்கள் அதாவது, 9 மாதம் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட ரேஷன் பெண் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here