தமிழக மகளிருக்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை, எப்போது வழங்கப்படும் என்று அறிவிப்பை தமிழக சபாநாயகர் அப்பாவு அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
மகளிருக்கு உரிமை தொகை :
தமிழக அரசு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று, தற்போதைய ஆளும் அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், இன்னும் இந்த உரிமை தொகைக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பதால் எதிர்க்கட்சிகள் பலரும் அரசின் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழகத்தின் நிதி நிலையை பொறுத்து, விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என நிதி அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2500., விரைவில் வெளியாகும் அறிவிப்பு! பொதுமக்கள் குஷி!!
இந்த நிலையில், 13 வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டை சபாநாயகர் அப்பாவு சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக மகளிருக்கான உரிமை தொகை இந்த ஆண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு நிச்சயம் வழங்கப்படும் என்றும், முதல்வர் இதற்கான பணிகளை துவக்கி விட்டார் என்றும் அறிவித்தார். இதனால் வரும் ஜனவரியில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.