தமிழக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000, உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அரசின் திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை மாநில நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் அதிரடி :
தமிழகத்தில் பதவியேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின் போது இல்லத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. கழக அரசு அமைந்து ஓராண்டுக்கு மேல் கடந்து விட்டதால், இந்தத் திட்டம் எப்போது அமலாகும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது உள்ள நிதி நிலையை சரி செய்த பின் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என, அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
உங்க போனுக்கும் 5 ஜிபி டேட்டா Free – இதை மட்டும் பண்ணா போதும்! முன்னணி நிறுவனம் சர்ப்ரைஸ்!!
அதாவது, பெண்களுக்கு வழங்கப்படும் இந்த உரிமை தொகையை பெறப்போகும் குடும்பங்களின் உண்மைத்தன்மை பற்றி விசாரித்து வருவதாகவும், இது முடிந்த பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். கடந்த கால ஆட்சியில், நடந்த தவறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்ட பின் மக்களுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பால், பொதுமக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.