தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், குறித்த சூப்பர் அறிவிப்பை கூட்டுறவுத்துறை அமைச்சர் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில், திமுக தலைமையிலான அரசு அமைந்ததும் இல்ல தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் தற்போது, திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் இது குறித்து அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில், இந்த மாதாந்திர உதவி தொகை குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் அதிரடியாக வெளியிட்டுள்ளார். இது, நீண்ட நாளுக்கான திட்டம் என்பதால், இதனை செயல்படுத்த கால தாமதமானதாகவும், நிதி பற்றாக்குறையாலும் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை என தெரிவித்தார்.
IND vs NZ 3 வது T20: தொடரை வெல்ல எந்த அணிக்கு அதிக வாய்ப்பு?? முழு விவரம் உள்ளே!!
தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் முதல்வர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் உறுதியளித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால், இல்லத்தரசிகளுக்கான உரிமை தொகை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.