தமிழக தொழில் நிறுவனங்களில், தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், முக்கிய தொழிற்சாலை ஒன்றில் 80% பேருக்கு வேலைவாய்ப்பு ரெடியாகிவிட்டது என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
கொரோனா பெருந்தொற்றுக்கு பின் தமிழக தொழில் துறையில் குறிப்பிட தகுந்த பல மாற்றங்கள் நடந்து வருகிறது. முதல்வர் தலைமையில் பல தொழில் மாநாடுகள் நடத்தப்பட்டு, பல முதலீட்டாளர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அமலான புதிய திட்டம் – ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு !
அந்த வகையில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனத்தில் தமிழருக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள, டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிறுவனம், 80%க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே கொண்டு நிரப்ப போவதாக உறுதி அளித்துள்ளது. இதனால் படித்த பல வேலையில்லா இளைஞர்கள், வேலைவாய்ப்பை பெற போகின்றனர்.