தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு:
தமிழக அரசின் சார்பாக, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு முதல் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் வரை, அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ற வகையில் மாதந்தோறும் ரூபாய் 1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள், மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், ஓராண்டு போதும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தங்களின் மாற்றுச் சான்றிதழ், வருமான வரிச் சான்று, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் தகுந்த கல்வி சான்றுகள் ஆகியவற்றை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் சிறுதானிய உணவு.., மாணவர்கள் ஊட்டச்சத்து கருதி முன்வரும் தன்னார்வ நிறுவனம்!!!
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 க்குள்ளும், இதற்கு முன்பு எந்த உதவித் தொகையும் பெறாதவராகவும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.