தமிழக ஆன்மீக அன்பர்கள் கவனத்திற்கு – அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம்! பரவசத்தில் பக்தர்கள்!!

0
தமிழக ஆன்மீக அன்பர்கள் கவனத்திற்கு - அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம்! பக்தி பரவசத்தில் பக்தர்கள்!!
தமிழக ஆன்மீக அன்பர்கள் கவனத்திற்கு - அரசின் சூப்பர் திட்டம் தொடக்கம்! பரவசத்தில் பக்தர்கள்!!

தமிழகத்தில் ஆன்மீக அன்பர்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் விதமாக மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்லும் திட்டத்தை, அமைச்சர் இன்று துவக்கி வைத்தார்.

அமைச்சர் அதிரடி:

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி துறை இணைந்து ஆன்மீக அன்பர்களை, பக்தி சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை அரசு அண்மையில் அறிவித்தது. இதன் மூலம், கடந்த ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனைத் தொடர்ந்து இந்த புரட்டாசி மாதத்தில் 2 கட்டமாக, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முதல் கட்டமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

உங்க போனுக்கும் 5 ஜிபி டேட்டா Free – இதை மட்டும் பண்ணா போதும்! முன்னணி நிறுவனம் சர்ப்ரைஸ்!!

அங்கு அவர்களுக்கு இலவச தரிசனம், பிரசாதம் மற்றும் மதிய உணவு ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ள பக்தர்களை, தரிசனத்திற்கு அழைத்துச் செல்லும் சுற்றுலாவை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மதி வேந்தன் ஆகியோர் கொடியசைத்து இன்று துவக்கி வைத்துள்ளனர். அரசின் இந்த அதிரடி திட்டத்தால் ஆன்மீக அன்பர்கள் பரவசமடைந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here