தமிழகத்தில் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மானிய மின்சாரத்தின் அளவு உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் அறிவிப்பு:
தமிழகத்தில், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் மூலம் சமீபத்தில் கட்டணங்கள் அனைத்தும் உயர்த்தப்பட்டது. புதிய கட்டண வரைமுறைப்படி, தற்போது வாடிக்கையாளர்களிடம் மின்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது போக, 100 யூனிட்டுக்கு கீழ் இலவச மின்சாரம் பெறுவோர், விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுக்கான இலவச மானியம் தொடரும் என அரசு அறிவித்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில், விசைத்தறி நெசவாளர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதாவது விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 700 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்துவதாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட் உயர்த்தப்படுவதாக வும் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இந்த அறிவிப்பு முன் தேதியிட்டு மார்ச் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.