தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயிற்சி அளிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
விதிமுறைகள் வெளியிடல்
தமிழக அரசானது, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வண்ணம், அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க ⇛⇛க்ரீமிலேயர் வருமான வரம்பு விவகாரம்: பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!!
மேலும், உடற்பயிற்சி கூடத்தை திறக்கவும், நீச்சல் பயிற்சிகளை தொடங்கவும் தொடர்ந்து தடை விதித்த வண்ணமே உள்ளன.
வயது வரம்பு
தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பதினைந்து வயதிற்கு உட்பட்டவர்களும் மற்றும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் கலந்துக் கொள்ள கூடாது என்று விதி விதிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயன்படுத்த வேண்டும் என்றும் விதி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விளையாட்டு வீரர்கள் அல்லது பயிற்சியாளர்கள் யாருக்கேனும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தாலோ அல்லது சந்தேகிக்க பட்டாலோ, அதனை உடனடியாக சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.