
தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால நலன் கருதி ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக தமிழக அரசுப் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்க ஆண்டுக்கணக்கில் தாமதமாகி வருவதாக ஆசிரியர் தரப்பில் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி அரசு பள்ளிகளில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு உடனடியாக ஓய்வூதிய பலன்கள் கிடைக்க முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற கால தாமதங்கள் தவிர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அடுத்தடுத்து நிகழும் நிலநடுக்கம்.., அச்சத்தில் செய்வதறியாமல் தவிக்கும் மக்கள்!!!