தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி படிப்பு மட்டுமல்லாமல் பல்வேறு திறனறிவு வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயில நீட் போன்ற நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் அதிக பணம் செலவழித்து கோச்சிங் சென்டர் போக முடியாமல் தவித்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி 46,216 மாணவர்கள் நீட் தேர்வுக்கும், 29,279 மாணவர்கள் ஜே.இ.இ.தேர்வுக்கும், 31,730 மாணவர்கள் இவ்விரு தேர்வுக்கும் பயிற்சி பெற ஆர்வமாக உள்ளதாக கல்வித்துறை சார்பில் தெரிவித்துள்ளனர். இந்த நுழைவுத்தேர்வு பயிற்சி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வெடித்த ஹிஜாப் தடை விவகாரம்., அரசு கொடுத்த அனுமதி உத்தரவு மீறல்., மாணவர்கள் அதிர்ச்சி!!!