அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசுப்பள்ளிகளில் வளாக பராமரிப்பு செலவினங்களுக்காக ஆண்டுதோறும் மத்திய அரசு நிதி வழங்குகிறது. நடப்பு நிதியாண்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.126.45 கோடி மானியம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த தொகை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்தந்த பள்ளி மேலாண்மை குழுவின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பள்ளிகளில் கற்றல் உபகரணங்கள், சுகாதார பணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வாங்க பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக பயணிகளே…, தொடர் விடுமுறைக்கு சிறப்பு வசதிகள்…, போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!