மகளிர் சுய உதவிக்குழுவில் ரூ.3 லட்சம் வரை கடன்களுக்கு வட்டி விகிதம் 12%இல் இருந்து 3% ஆக குறைக்க முடிவு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
குடும்ப பெண்கள் சுய தொழில் தொடங்கவும், தங்கள் வாழ்வாதரத்தை மேம்படுத்தி கொள்ளவும் உதவி கரமாக இருப்பது சுய உதவி குழுக்கள். இந்நிலையில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டப்பேரவையில் இன்று மகளிர் சுய உதவிக்குழுவில் ரூ.3 லட்சம் வரை கடன்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக ஆக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த செய்தி பல குடும்ப தலைவிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வட்டி விகித குறைப்பின் மூலம் 3,63,881 குழுக்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். மொத்தம் 43,39,780 உறுப்பினர்கள் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்