தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக அகவிலைப்படி உயர்த்த கோரி போராடி வந்தனர். ஆனால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பு, கடன் சுமை ஆகியவற்றால் அரசு நெருக்கடியில் இருப்பதாக காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தொடர்ந்து பேசுகையில், “இனி வரும் காலங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் அதே காலத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.” எனவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
புதிய சாதனை படைத்த விஜய் டிவி சீரியல்., இனிமே இவங்க ஆட்டம் வேரலெவலா இருக்கும்!!
ஆனால் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் குறைந்து வருவதால் AICPI குறியீடு 3 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கும் என தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 45 சதவீதம் வரை உயரும். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.