தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் வாக்குறுதியாக மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்தும், இதுவரை இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதன்பிறகும் தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.