அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் மின்சாரத்தின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மின் கட்டணம் உயர்வு:
கடந்த ஜூலை 18 ஆம் தேதி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழக மின் வாரியம், மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தி தர கோரி மனுக்களை சமர்ப்பித்தது. மேலும் மின் கட்டண உயர்வு குறித்து மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அந்த கருத்துக்கணிப்பில் ஏராளமான மக்கள் மின் கட்டணம் உயர்வை எதிர்த்துள்ளனர். இதுஒருபுரம் இருக்க சில தொழிற்சாலை நிறுவனங்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட உறுப்பினர் நியமிக்காமல் இருப்பதை பற்றி வழக்கு தொடர்ந்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றம் விசாரித்த போது உறுப்பினர் நியமிக்கும் வரை மின்சார கட்டணத்தை உயர்த்துவதை தொடர்ந்து எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தனர். மேலும் இந்த வழக்கை விசாரித்த மதுரையில் உள்ள உயர் நீதிமன்றம் அறிவிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் மின்கட்டணம் உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கூடிய விரைவில் இது சம்மந்தபட்ட அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.