தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் பெரும்பாலான பகுதிகளில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக சாலை போக்குவரத்து துறை கோரிக்கை வைத்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் தமிழ்நாடு அரசு துறை வாகன ஓட்டுனர்கள் சங்கம் ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு உள்ளனர். அதாவது அரசு துறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களை அகற்றி விட்டு புதிய வாகனங்களை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் முன் வைத்து உள்ளனர்.
ரேஷன் அட்டைதாரர்களே.., இனி எந்த விபரங்களுக்கும் இதுக்கு கால் பண்ணா போதும்.., முழுவிபரம் உள்ளே!!
இதில் அரசு ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் மோகன மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்யுமா? என பொறுத்திருந்து பாப்போம்.