தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் ஆளுநர் தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் கொரோனா தொற்று பரவியுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ.,க்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மேலும் முதல்வர் அலுவலக பணியாளர்கள், அமைச்சர்களின் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 38 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!!
சோதனை முடிவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உதவியாளர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் ஆளுநர் தனது இல்லத்தில் மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.