தமிழகத்தில், குடும்ப தலைவிகளுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்குவது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்ஜெட் தாக்குதலில் சில முடிவுகள் எடுக்கப்பட்டு இருந்தனர். அதாவது, இந்த ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான குடும்ப தலைவிகள் யார் யார் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன்படி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், விதவை, ஆதரவற்றோர், முதியோர் உதவித்தொகை பெறாதவர்கள், நடைபாதையில் கடை வைத்துள்ள பெண் வியாபாரிகள், மீனவ, சிறு, குறு தொழிலில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் கட்டிட வேலை பார்க்கும் பெண்கள் இதற்கு தகுதியானவர்கள் எனவும் இதற்காக, ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த உதவி தொகையை அறிஞர் அண்ணா பிறந்த நாள் (செப்டம்பர் 15) முதல் வழங்க திட்டமிட்டுள்ளது முன்பு குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நியமனம்., வெளியான முக்கிய தகவல்!!!
இந்த உதவித்தொகை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகள் மூலம், மைக்ரோ ஏடிஎம் கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்வதா? அல்லது நேரடியாக வங்கி கணக்கிற்கு செலுத்துவதா? , என அரசு ஆலோசித்து வருகிறதாம். இதற்கு விரைவில், தகுந்த முடிவு எடுக்கப்பட்டு குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.