தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை,பள்ளி கல்வித்துறை அமைச்சர் கல்வி சுற்றுலா மூலமாக இன்று துபாய் அழைத்துச் செல்கிறார்.
கல்வி சுற்றுலா:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வினாடி வினா, நூல் வாசிப்பு, விளையாட்டு உள்ளிட்டவைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துபாய் அழைத்துச் செல்கிறார். இந்த பயணத்தின் போது, ஷார்ஜாவில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தக கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட உள்ளனர்.
இந்தியாவில் ஹைப்ரிட் முறைக்கு அதிக வரவேற்பு.,, ஊழியர்கள் ஏகோபித்த ஆதரவு.,முழு விவரம் இதோ!!
மேலும் அவர்களுடன் அரசு பள்ளி ஆசிரியர்களும் உடன் செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல் துபாயில் சிறப்பாக செயல்படும் பள்ளிகள், ஆய்வகங்களுக்கும்,முக்கிய சுற்றுலா தளங்களுக்கும் சுற்றிப்பார்க்க மாணவர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். இந்த முயற்சி அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் கல்வி ஆர்வத்தை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.