தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி இப்போது கோவை மாவட்டத்தில் வீரபாண்டி முதல் முத்தமிழ் நகர் நகரில் பயின்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மிகவும் சிரமப் படுவதாக புகார் வந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது அப்பகுதியில் காலை 9 மணிக்கு ஒரு பேருந்தும், அதேபோன்று மாலை 4 மணிக்கு ஒரு பேருந்தும் இயங்குவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இந்தப் பேருந்தை அரசு பள்ளி மாணவர்கள் தவறவிட்டால் அன்று பள்ளி செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுவதாகவும் அதனால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் அடிச்சு ஊத்த காத்திருக்கும் கனமழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!