தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட நம்ம ஸ்கூல் திட்டத்துக்காக, ரூபாய் 1.29 கோடி தொகையை முதல்வர் ஸ்டாலினிடம் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.
நம்ம ஸ்கூல் திட்டம்:
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்து வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம், நான் முதல்வன் திட்டம், பண்பாட்டு கலைத்திருவிழா போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்க முடிவெடுக்கப்பட்டது.
அந்த வகையில், இவர்களின் ஒரு மாத ஊதியமான ரூபாய் 1.29 கோடிக்கான காசோலையை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் இன்று வழங்கியுள்ளனர். அரசின் இந்த புதிய திட்டத்திற்கு பலரும் தற்போது வரவேற்பு தெரிவித்துள்ளனர்.