தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை முதல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான அறிவிப்பு:
தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது போன்ற நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இதனை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 13-ஆம் தேதியான வெள்ளிக்கிழமை முதல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது.
JEE தேர்வில் அமலாகும் புதிய வழிமுறைகள்., விதிமுறைகளை மாற்ற அரசு திட்டம்! வெளியான அறிவிப்பு!!
கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பள்ளி கல்லூரி மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டும் அரசு இந்த முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.