தமிழகத்தில் வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 பணம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொக்க பணம்:
தமிழகத்தில் வருடம் தோறும் தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசால் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
நாளைய மின்தடை (10.11.2022) – மதுரையில் மட்டும் இவ்ளோ பகுதியா? உடனே செக் பண்ணி பாருங்க!!
அந்த வகையில் கடந்த (ஜனவரி, 2022) பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்த சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கியதில் பல குளறுபடிகள் நடந்ததாக எதிர்கட்சினர் தரப்பில் இருந்து குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இருப்பினும் இந்த முறை பொருட்கள். வழங்கப்படாமல், ரொக்கப்பணம் ரூ.1000 கொடுக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும்,விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.