தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு விவசாய நிலம் வாங்க ரூ. 5 லட்சம் வரை மானியம் வழங்கும் புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு :
தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு புத்தம் புதிய திட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. இந்த மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் சமூக நீதியை நிலை நிறுத்துவதற்காகவும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தாழ்த்தப்பட்ட மக்கள் நிலம் வாங்குவதற்காக, நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், 200க்கும் மேற்பட்ட நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் பயன்பெறுவர் என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் இடம் பெற்றுள்ளது