தமிழகத்திற்கு இந்த ஆண்டு, ஜிஎஸ்டி வரி பகிர்வாக ரூபாய் 5769 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அதிரடி காட்டியுள்ளது.
அரசு ஒதுக்கீடு:
மாநிலங்களின் வளர்ச்சிக்காக, விற்பனை பொருட்கள் அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசால் நேரடியாக விதிக்கப்படும், இந்த சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் ஆண்டுதோறும், இந்த ஜிஎஸ்டி வரியின் குறிப்பிட்ட மாநில வரை பகிர்வை மத்திய அரசு தொடர்ந்து விடுவித்து வருகிறது. மத்திய அரசால் வழங்கப்படும் இந்த தொகை அனைத்தும், பொது மக்களின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு செலவழிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நாடு முழுவதும் 1, 40, 318 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு., ஏப்ரல் 1 முதல் அமல்! மீறினால் அபராதம் கன்பார்ம்!!
இதன் வழி, தமிழகத்திற்கு இந்த ஆண்டு ரூ. 5769 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கடந்தாண்டு விடுவிக்கப்பட்ட தொகையை விட இந்த தொகை இரட்டிப்பாகும். தற்போது இந்த தொகையின் மூலம், மாநில மக்களுக்கு கிடப்பில் உள்ள பல வளர்ச்சி திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.