தமிழக அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி ஊதிய உயர்வு இன்னும் வழங்கப்படாததை கண்டித்து சேலம் மாவட்டத்தில், அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதிரடி போராட்டம் :
அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு, 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் ஊழியர்களின், அகவிலைப்படி 34% லிருந்து 38%மாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவை பல மாநில அரசுகள் செயல்படுத்தி விட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால், தமிழகத்தில் இது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த சுதந்திர தினத்தின் போது 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டது. அதன் பிறகு, 4 மாதங்கள் ஆகியும் இந்த ஊதிய உயர்வில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் பொறுமை இழந்த ஊழியர்கள், போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழக விவசாயிகளுக்கு ஜாக்பாட்., இதை மட்டும் செஞ்சா ரூ. 2 லட்சம் கன்பார்ம்! அரசு அறிவிப்பு!!
சேலம் மாவட்ட ஊழியர்கள் சங்கம் சார்பாக தற்போது அரசின் காலதாமதத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று அரசு ஊழியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து அரசுக்கு எதிராக கண்டன முழங்கங்களை எழுப்பினர். இது குறித்து பேசிய மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என அறிவித்துள்ளார்.