தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – இதை செய்தால் இனி வேலை காலி! அரசு பகிரங்க எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் 20% தீபாவளி போனஸ்? ரூ.10,000 முன்பணம்.,குவியும் கோரிக்கை - விரைவில் குட் நியூஸ்!!

தமிழகத்தில் இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு எச்சரிக்கை:

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது 2வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973 ன் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது திருமணம் செய்வது சமுதாயத்துக்கு கேடானது என்றும், இதனால் முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் அரசு குற்றம் சாட்டியுள்ளது. அரசு ஊழியர்களின் மரியாதைக்கு களங்கம் ஏற்படும், இந்த செயலை செய்யும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here