தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் மாதந்தோறும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்களுடன் சேர்த்து மல்லிகை, மசால், பொரிகடலை போன்ற பொருட்களும் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனம் சார்ந்த பெயரில் வழங்கப்படும் இந்த பொருட்கள் தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். மேலும் இந்த பொருட்களை மக்கள் வாங்க மறுத்தாலும் ரேஷன் கடை ஊழியர்கள் வாங்க சொல்லி வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த புகாரை அடுத்து தற்போது தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் இது போன்ற பொருட்களை விற்கக் கூடாது என கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வேலை தனியார் நிறுவனங்களிடம் வாங்கி விற்க நேர்ந்தால் தரமான பொருட்களை தான் விற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். தற்போது இந்த அறிவிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
பழங்குடியினருக்கான நிதியுதவி உயர்வு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி முதல்வர்!!