தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஜிகே வாசன் ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்களை தேர்வின் மூலம் நிரப்பாமல் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது போக்குவரத்து கழகங்களில் முறையாக பயிற்சியும், சான்றிதழ் பெற்றவர்கள், இந்திய சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் தான் தமிழக அரசு பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இது போன்று உரிய சான்றிதழ், பயிற்சியும் உள்ளவர்கள் அரசு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். எனவே அவர்களுக்கே தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டால் பல்வேறு முறைகேடுகள் நிகழலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்று பணி நியமனம் செய்வதால் அரசு பேருந்தில் பயணிப்பவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.