கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் அமலாகும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்?

0
தமிழகத்தில் கொரோனா புது உச்சம் - பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? ஸ்டாலின் அவசர ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா புது உச்சம் - பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? ஸ்டாலின் அவசர ஆலோசனை!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார்.

இன்று ஆலோசனை:

இந்தியா முழுவதும் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதிலும், குறிப்பாக தலைநகர் டெல்லியில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் வைரஸ் பரவல் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும், குறிப்பாக தலைநகர் சென்னையில் அதிகமான நபர்கள் பாதிக்கப்படுகின்றனர். வட மாநிலத்தில் இருந்து வந்து ஐஐடியில் பணிபுரியும் ஊழியர்களால் தான் இங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது அதிகரித்து வரும் வைரஸ் பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு, வெளிமாநிலத்தில் இருந்து வருவோரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல், தடுப்பூசி செலுத்ததலை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது. ஆனால், தற்போதைக்கு முழு ஊரடங்கு குறித்து அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here