100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டுமா? 2 நாட்களுக்குள் இதை முடிக்கணும்! மின்சார வாரியம் கறார்!!

0
100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டுமா? 2 நாட்களுக்குள் இதை முடிக்கணும்! மின்சார வாரியம் கறார்!!
100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டுமா? 2 நாட்களுக்குள் இதை முடிக்கணும்! மின்சார வாரியம் கறார்!!

தமிழகத்தில், மின் இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள் மற்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் பெரும் பயனர்கள், அனைவரும் 2 நாட்களுக்குள் இதை கட்டாயம் செய்து முடிக்க வேண்டும் என்று மின்சாரத் துறை அறிவித்துள்ளது.

மின்சாரத் துறை அதிரடி :

தமிழகத்தில் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம், சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வில் இருந்து வழக்கம் போல் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் 100 யூனிட் க்கும் கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் என அனைவருக்கும் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், மின் கட்டணம் குறித்த முறைகேடுகளை தவிர்க்க, பயனர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என, தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. மின்சார கட்டணத்தில் மானியம் பெறுவோர் மற்றும் மின் இணைப்பு பெற்றுள்ள பயனர்கள் வரும் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில், இந்த இணைப்பை கட்டாயம் செய்து முடிக்க வேண்டும் எனவும், இந்த இணைப்புக்கு பிறகுதான் பயனர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(25.11.2022) – முழு விவரம் உள்ளே!!

ஒரே நபர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் மின்சார சேவைகளை வைத்திருந்தால், அதை சுலபமாக கண்டுபிடிப்பதற்காக தான், இந்த இணைப்பு செய்ய சொல்லி, அரசு வற்புறுத்தி வருகிறது. எனவே அனைவரும் இந்த, செயல்முறையை விரைந்து முடிக்க வேண்டும் என, மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here