தமிழகத்தில் இயற்கை விவசாயங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” என்ற திட்டத்தை தமிழக வேளாண்மைத் துறை மற்றும் வனத்துறையினர் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உள்ளனர். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர வைப்புத்தொகை மட்டுமல்லாமல் இலவசமாக மரக்கன்றுகளும் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி மகோகனி, தேக்கு, வேம்பு, புங்கை, நாவல் உள்ளிட்ட பல்வேறு தரமான மரக்கன்றுகள் வழங்கப்படும். இந்த மரக்கன்றுகளை விவசாயிகள் பெற “உழவன்” செயலியில் பதிவு செய்து வேளாண்மைத் துறையின் பாிந்துரையின் படி மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது