தமிழக விவசாயிகளுக்கு 2 லட்சம் வரை பரிசு தொகை வழங்கும் புதிய திட்டத்தை, மாநில வேளாண் உற்பத்தி ஆணையர் அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
அதிரடி அறிவிப்பு :
மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டி இல்லா கடன் வழங்குதல், பயிர் மற்றும் நகை கடன் தள்ளுபடி போன்ற கணக்கிலடங்கா திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதே போல் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான், என்ற திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் 6,000 ரூபாயை மூன்று தவணைகளாக ரூபாய் 2000 வீதம் விவசாயிகளின் கணக்கில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழக விவசாயிகளுக்கு, புதிய பரிசுத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் கல்லூரி அட்மிஷனுக்கு இனி இது கட்டாயம் – அரசு அதிரடி அறிவிப்பு!!
ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு, ரூபாய் 2 லட்சம் பரிசு தொகை வழங்க உள்ளதாக மாநில வேளாண் உற்பத்தி ஆணையர் அறிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், உழவன் ஆப் என்ற செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.