தமிழக அரசானது, விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. விவசாயிகளின் அத்தியாவசிய பொருட்களாக கருதப்படும் வேளாண் எந்திரங்களையும் மானியத்துடன் இவர்களுக்கு வழங்க தமிழக அரசானது முடிவு செய்துள்ளது. இதன்படி, வேளாண் உற்பத்தியை பெருகுவதுடன், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரிக்கும் நோக்கத்துடன் வேளாண் இயந்திர மயமாக்குதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதற்காக, 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையின் படி, ரூ.41.23 கோடி மானியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்ட கிராமங்களுக்கு 5 ஆயிரம் பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் கருவிகள் வழங்கவும், ரூ.27.94 லட்சம் மானியத்தில் 27 பவர் டில்லர்கள் மற்றும் 13 விசை களை எடுப்பான் கருவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் மாநில அரசின் நிதியிலிருந்து வழங்கப்பட உள்ளது என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!